அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.ஹெயெங் மங்ஃபி, ஜிகே டகோ, டோங்ரு சியோங்ஜு, டேலம் தபோ, காங்காங் டாகு மற்றும் டோர்ஜி வாங்டி கர்மா ஆகிய 6 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர் . அவர்களில் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு நவம்பர் 26-ஆம் தேதி அன்று “கட்சி விரோத நடவடிக்கைகள்” காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டனர்.
“கட்சியில் சேருவதற்கான நோக்கத்தை தெரிவிக்கும் அவர்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பாஜகவின் அருணாச்சல பிரதேச தலைவர் பி.ஆர் வாகே கூறியுள்ளார். பாஜகவும், ஜனதா தளமும் சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் நவம்பர் மாதம் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்றன.இந்த வெற்றியால் நிதிஷ் குமார் தனது நான்காவது முறையாக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…