நிதிஷ்குமார் கட்சிக்கு சிக்கல் ! பாஜகவுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்கள்

Default Image

அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு  பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48  எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.ஹெயெங் மங்ஃபி, ஜிகே டகோ, டோங்ரு சியோங்ஜு, டேலம் தபோ, காங்காங் டாகு மற்றும் டோர்ஜி வாங்டி கர்மா ஆகிய 6  ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர் . அவர்களில் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு நவம்பர் 26-ஆம் தேதி அன்று “கட்சி விரோத நடவடிக்கைகள்” காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டனர்.

“கட்சியில் சேருவதற்கான நோக்கத்தை தெரிவிக்கும் அவர்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பாஜகவின் அருணாச்சல பிரதேச   தலைவர் பி.ஆர் வாகே கூறியுள்ளார். பாஜகவும், ஜனதா தளமும் சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் நவம்பர் மாதம் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்றன.இந்த வெற்றியால் நிதிஷ் குமார் தனது நான்காவது முறையாக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்