ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் நேற்று துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுரங்கப்பாதை ஒன்றினை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச எல்லையில் விக்ரம் மற்றும் படேல் ராணுவ நிலைகளுக்கு மத்தியில் சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்தோம். இது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருமாறு போடப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பணிகள் நிறைவு பெறவில்லை. 14 அடி நீளம் கொண்டதாக இந்த பாதை உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர், எல்லையில் சுரங்கப்பாதை ஏதேனும் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…