Categories: இந்தியா

தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

Published by
Dinasuvadu desk

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி  இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர்  இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவற்றுக்கு பின்னால் பாஜக இருகிறதா இல்லையா என தெரியவில்லை அனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைவரும் இந்த மாற்றங்களுக்கு பின்னும் பாஜக இருக்கிறது என குற்றம் சாட்டின.

இந்நிலையில் தினத்தந்தி பவளவிழாவிற்கு வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கே முதல் நாள் இரவுதான் தெரிய வந்ததாம் .
பவளவிழாவில் பேசிய மோடி பேச்சில், அவர் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார் என தெரிகிறது. மேலும் மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுவும் தமிழக பாஜகவினருக்கு புரியவில்லை.
இதனை குறித்து தமிழக பாஜக நிர்வகியை தொடர்புகொண்ட பொது அவர் தெரிவித்தது “ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தமிழகம் வருவது எங்களுக்கு தெரியும், ஆனால் கருணாநிதியை சந்தித்தது எங்களுக்கு  முந்திய நாள் தான் தெரியும். மேலும் அவர் இங்கு ஓர் பத்திரிக்கையாளர் மூலம் தமிழகத்தில் உளவுபார்த்திருகிறார். மோடி அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்  மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.”எனவும் தெரிவித்தார்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரியுது மோடி எப்போ என்ன சொல்வார் என்ன செய்வார் என்பது அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரிவது இல்லை!
மேலும் திடிரென சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து 182 இடங்களில் வருமான வரி சோதனை, கருணாநிதி மோடி சந்திப்பு, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி, அமித்ஷா தமிழகதிற்கு  வருவது இரு முறை ஏன் தள்ளிவைக்கப்பட்டது என மோடியும், பாஜக தேசிய தலைவர்  அமித்ஷாவும் எடுக்கும் முடிவுகளும், திட்டங்களும் என்னவென்று  தெரியாமல் தமிழக பாஜக தலைவர்கள், தொண்டர்கள்  அனைவரும்  புரியாமல் தவிகின்றனர்.

Published by
Dinasuvadu desk
Tags: #Politics

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

29 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago