டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இது வரை டெல்லியில் 1,044 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 92 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 89 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட டெல்லியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 10% பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…