டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இது வரை டெல்லியில் 1,044 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 92 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 89 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட டெல்லியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 10% பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…