கருப்பு பூஞ்சை பாதிப்பால் மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் நாடு முழுதும் இதுவரை பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனராம்.
இதுகுறித்து இன்று அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மகாராஷ்டிராவில் 7,998 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 729 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது 4392 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் நாக்பூர் மாவட்டத்தில் தான் 104 பேர் கருப்பு பூஞ்சையால் உயிரிழந்து உள்ளனராம். மேலும், புனேவில் 90 பேரும், ஒளரங்காபாத்தில் 75 பேரும் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…