ஆந்திராவில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்கள்; 4 காங்கிரஸ் கட்சியினர் கைது

Default Image

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பழம்பெரும் சுதந்திரத்தின் 30 அடி வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார்.

ஆந்திராவில் விஜயவாடாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதை அடுத்து  4 காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கிருஷ்ணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சித்தார்த் கௌஷால் கூறுகையில், கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன் கருப்பு பலூன்களை வெளியிட்டதற்காக 3 காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர், அங்கு கடுமையான பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

கன்னவரம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது பாதுகாப்புக் குறைபாடு ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸார் பின்னர் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கின்றனர். “பிரதமர் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு (விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் வழியாக) பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன,” என்று காவல்துறை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனம் ஏஎன்ஐ பகிர்ந்துள்ள காட்சிகளின்படி, விஜயவாடாவில் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமருக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட வானத்தில் பலூன்கள் பறந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்