அசாம் சட்ட சபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்று ஆளும் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அசாம் சட்டசபை தேர்தல் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அதேபோல பாஜக கூட்டணியிலும் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய சில கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 76 தொகுதிகளை கைப்பற்றியதுடன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளை கைப்பற்றியது. 76 தொகுதிகளை கைப்பற்றி அசாமில் ஆளும் கட்சியான பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து அசாம் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் அசாமில் காங்கிரஸ் தான் அடுத்தடுத்த இரு முறைகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸை தவிர்த்து முதல்முறையாக பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…