முடிந்தது பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சி…!மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு…!

Default Image

மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை எதிர்க்கொண்டது. இந்நிலையில், முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு ராகுல்காந்தியிடம் கொடுக்கப்பட்டது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

பின்னர் போபாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.எனவே 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்