Categories: இந்தியா

யார் முன்னிலை.? பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி.! இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..

Published by
மணிகண்டன்

இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது.

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில்,  டெஹ்ரா தொகுதியில் எண்ணப்பட்டு முடிந்த 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஹோஷ்யர் சிங் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், இமாச்சல பிரதேச முதல்வருமான சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் தற்போது சிறிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அதே போல இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா முன்னிலை வகிக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் பாஜகவின் ஆஷிஷ் சர்மா சற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுரீந்தர் கவுர் 3000 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

8 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

9 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

9 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

10 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

11 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

13 hours ago