மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கோகோயினுடன் கைது செய்யப்பட்டார்.
பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் பாமெலா கோஸ்வாமி போதைப்பொருட்களுடன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் பிரஜீர் தே என்ற பாஜக தலைவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் அலிபூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் வட்டாரங்களின் தகவல்களின்படி, பாமெலாவிடமிருந்து 100 கிராம் கோகோயின் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமெலா மற்றும் பிரபீர் தவிர, அவரது மெய்க்காப்பாளர்களும் காரில் இருந்தனர்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் அவர்களுடன் வேறு யார் ஈடுபட்டுள்ளனர்..? அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா..? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…