மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கைது..!

Default Image

மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கோகோயினுடன் கைது செய்யப்பட்டார்.

பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் பாமெலா கோஸ்வாமி போதைப்பொருட்களுடன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் பிரஜீர் தே என்ற பாஜக தலைவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் அலிபூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் வட்டாரங்களின் தகவல்களின்படி, பாமெலாவிடமிருந்து 100 கிராம் கோகோயின் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சங்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமெலா மற்றும் பிரபீர் தவிர, அவரது மெய்க்காப்பாளர்களும் காரில் இருந்தனர்.

போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் அவர்களுடன் வேறு யார் ஈடுபட்டுள்ளனர்..? அவர்கள்  போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா..? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்