விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது…!

Published by
Rebekal

ஆந்திர பிரதேசத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா பரவல் தற்பொழுது குறைந்து உள்ளது. இருப்பினும், கொரோனா 3 ஆம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி விநாயக சதுர்த்தி விழாவின் பொழுது, பொது மக்கள் அதிகமாக கூட கூடாது எனவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது போல ஆந்திர பிரதேச மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் சோமு வீராஜு மற்றும் மாநில பொதுச் செயலாளர் விஷ்ணு வர்தன் ஆகியோர் மற்ற கட்சி தலைவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளின் படி தான் ஆந்திர மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழாவிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் முடிவை அரசியல் ஆக்குவதற்காக மாநில பாஜக தலைவர்கள் இவ்வாறு போராட்டங்கள் நடத்துவதாகவும், மேலும் இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

Recent Posts

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

11 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

2 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

2 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

2 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

3 hours ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

17 hours ago