கடந்த 2017-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 60 இடங்களில் 21 இடங்களை கைப்பற்றி பாஜக, சுயேச்சைகள் மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக மணிப்பூரில் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏக்களும், ஆளும் பாஜக கூட்டணி கட்சி மற்றும் சபாநாயகரையும் சேர்த்து 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும், பாஜகவிற்கு கொடுத்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி 4 எம்எல்ஏக்களும், ஒரு சுயேச்சை மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். பின்னர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசிய எம்எல்ஏக்கள் பிறகு தங்கள் ஆதரவை அரசுக்கு கொடுப்பதாக கூறினார்கள்.
ஆனால், பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை எனக்கூறி காங்கிரஸ், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி மணிப்பூர் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பைரோன்சிங்குக்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தது. நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…