டெல்லி: மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். NDA கூட்டணியில் நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்ன்றனர்.
இந்த இரு தலைவர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர். விசிக தலைவர் திருமாவளவனும் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்து இருந்தார்.
தற்போது அமைய உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி பற்றி VCK தலைவர் திருமாவளவன் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று, மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில், I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சந்தித்து, தற்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தோம்.
தற்போது பாஜகவால் அமைக்கப்பட்டுள்ள அரசு 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்காது. ஓரிரு மாதங்களிலேயே கூட்டணியில் சிக்கல் ஏற்படும். சரியான நேரத்தில், நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என திருமாவளவன் பேசியிருந்தார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…