கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம்.! பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்.! எம்.பி சுஷில் குமார் மோடி பேட்டி.!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – பாஜக மக்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி.
பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியுள்ளது. இந்த கள்ளச்சாராய விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.
இது குறித்து மாநில அரசு இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாஜக எம்பி சுஷில் குமார் மோடி கூறுகையில், இந்த விவகாரத்தில் பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என பாஜக மக்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி கூறினார்.