தமிழ் மொழியை ஒழித்துவிட்டு தமிழர்கள் மீது மாற்று மொழியை திணிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடா்ந்து அக்கட்சியின் பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 3 நாட்களாக நடைபெற்று வரும் கூட்டத்தின் இறுதி நாளில் அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று பேசினாா்.
அவா் பேசுகையில், பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகாித்துள்ளது. நாட்டின் எந்த மூளைக்கு வேண்டுமானலும் சென்று இளைஞா்களிடம் கேட்டுப் பாருங்கள். நாங்கள் வேலையின்றி இருப்பதாக தான் கூறுகின்றனா். இந்தியா வளா்ந்து வரும் நாடாக இருந்தாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் பெருகி வருகிறது.
வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். உணவு, உடை என மக்கள் மீது எல்லாவிதத்திலும் கட்டுப்பாடுகளை மோடி அரசு திணிப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, அழகான தமிழ் மொழியை ஒழித்துவிட்டு மாற்று மொழியை தமிழர்கள் மீது திணிக்க மோடி அரசு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
source:dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…