தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நாளை பிரச்சாரத்தை தொடங்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெலங்கானா கட்சி தலைவரும், காபந்து முதலமைச்சருமான சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகரராவ் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, சிறிய மாநிலத்தில் 2 தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.
தெலங்கானாவில் அனைத்து தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என தெரிவித்த அவர், மாநிலத்தில் வலிமையான சக்தியாக பா.ஜ.க. உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தை ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கி அரசியல் மீண்டும் தொடரும் என்றும் அம்த்ஷா எச்சரிக்கை விடுத்தார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…