மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என கூறிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்காவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் கிளம்பி வருகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா 2 நாள் பிரச்சாரம் செய்ய அம்மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி அவர் நாளை மதியம் 12 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…