பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த கூட்டணி கட்சி ! தொகுதி கிடைக்காததால் ஏமாற்றத்தில் பாஜக

Published by
Venu

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் காலியாக இருந்த காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ்  உள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிடும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிவித்தனர்.மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு  அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அறிவித்தார்கள்.

ஆனால் தேர்தல் தேதி அறிவித்த முதலே பாஜக காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முழு வீச்சில் தயாராகி வந்தது. காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் விருப்பமனு வழங்கப்பட்டது.மேலும் நேர்காணலும் நடத்தப்பட்டது.எதிர்பாராத விதமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது .அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியாகி வந்தது.எனவே இன்று பாஜக -வை சமாதானப்படுத்த  என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முயற்சி செய்தனர்.ஆனால்  அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.இதனால் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago