பாஜக தேசிய தலைவர் நட்டா கார் மீது கல்வீச்சு.. குண்டர்கள் ஆட்சி நடந்ததாக விமர்சனம்!

Published by
Surya

மேற்குவங்கம் மாநிலத்திற்கு சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் கண்ணாடி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா காரில் சென்றார். அப்பொழுது அவர் சென்ற கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியாக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என கூறிய அவர், மேற்கு வங்கத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லையென கூறிய அவர், மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடந்ததாக தெரிவித்தார். மேலும், குண்டு துளைக்காத காரில் பயணித்ததால் இந்த தாக்குதலில் தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

அதுமட்டுமின்றி, பாஜகவின் மூத்த தலைவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் என்றும், துர்கா தேவியின் ஆசியால் நான் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பாக வந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், குண்டர்கள் ஆட்சியை நாம் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya
Tags: #BJP#JPNadda

Recent Posts

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை :  அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…

43 minutes ago

காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…

45 minutes ago

சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!

குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…

1 hour ago

“பணக் கொழுப்பு”..விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் சொன்ன பதில்!

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…

2 hours ago

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

3 hours ago

அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…

3 hours ago