ராஞ்சியில் பாஜக எம்பி ஒருவர் மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 15 வயதிற்கு உட்பட்பட்டவர்களுக்கு நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் பங்கேற்றார். அப்போது 15 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் தன்னை போட்டியில் பங்கேற்க செய்யும்படி பிரிஜ்பூஷனிடம் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த மல்யுத்த வீரர் 15 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் அவருக்கு தகுதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மீண்டும் நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பி அந்த வீரரை மேடையிலேயே அறைந்தார். இதன் பின் அந்த இளைஞர் மேடையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கைசர்கஞ்ச் தொகுதி எம்பியாக பிரிஜ்பூஷன் ஷரன் சிங் உள்ள இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…