இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்.. அது அடிமை அடையாளம்.? பாஜக எம்பி சர்ச்சை பேச்சு.!

Published by
மணிகண்டன்

இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்பி நரேஷ் பன்சால் பேசியுள்ளார். 

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் முடிவடைந்து உள்ளது. இந்த ஏழு நாட்களும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, முடங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால் இந்தியா எனும் பெயர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆங்கிலேயர்கள் தான் பாரதத்தின் பெயரை இந்தியா என மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பாரதம் எனும் பெயரில்தான் அறியப்பட்டு வந்துள்ளது. இதற்கான பழங்கால சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும், காலனித்தவ ராஜ்ஜியத்தால் (ஆங்கிலேயர்களால்) இந்தியா என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளது. எனவே இந்தியா என்ற பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும். கடந்த வருடம் சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் காலணித்துவத்தின் அனைத்து சின்னங்களையும் அளிக்க வேண்டும் என்று பேசி இருந்தார் என்று பிரதமர் மோடி பேசியது குறித்தும் குறிப்பிட்டு இந்தியாவின் பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் பாஜக எம்.பி நரேஷ் பன்சால்.

இந்தியா எனும் பெயரை நீக்க வேண்டும் என கூறிய பாஜக எம்.பி நரேஷ் பன்சாலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago