நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளும் பாஜக எம்.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது.
போபால் பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா உறுதியானது. இந்த தகவலை தனது ட்விட்டரில் சாத்வி பிரக்யா தெரிவித்தார். அதில், இன்று எனக்கு கொரோனா அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் “என்று எம்பி பிரக்யா ட்வீட் செய்துள்ளார். போபால் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கொரோனா முதல் அலையின் போது, அவர் கொரோனா நோயால் நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும், மாட்டு கோமியம் நுரையீரல் தொற்றுகளைக் குறைக்கிறது மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறது என்று கூறியது அனைவரும் அறிந்ததே.
தான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், தினமும் கோமியம் குடித்து உயிர் பிழைப்பதாகவும், கொரோனா வைரஸைத் தடுக்க கோமியத்தைத் தாண்டிய மருந்து எதுவும் இல்லை என்றும் பிரக்யா கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…