கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் 200 பேர்.? அதிர்ச்சி தகவலை கூறிய பாஜக எம்.பி ஆர்.கே.சிங்.!

Default Image

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார். 

மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிகையை ஆளும் நிதிஷ் குமார் அரசு மறைகிறது.

இறந்த பலரது உடல்கள் கணக்கு காட்டப்படாமல் சட்டவிரோதமாக எரிக்கப்பட்டதாக சாப்ரா பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தண்டி இருக்கும் எனவும் ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்