கொரோனாவால் பாஜக எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி காலமானார்..!

Default Image

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக கிரண் மகேஸ்வரி மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டு கிரண் மகேஸ்வரி ராஜஸ்தான் மகளிர் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2006-ஆம் ஆண்டு மகளிர் அணி தேசிய தலைவராகவும், கடந்த 2011-ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்