டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை தழுவியுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள செளகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக் , திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த 5 இடங்களில் செளகான் பங்கர் வார்டில் அதிக வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றியை வசமாக்கியது. மீதமுள்ள ரோகினி, ஷாலிமர்பாக் ,திரிலோக்புரி, கல்யாணபுரி ஆகிய வார்டில் ஆம்ஆத்மி வெற்றியை பதிவு செய்தது.
பல மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துவந்த பாஜகவிற்கு டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…