பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் காவல்துறை அதன் சைபர்செல்லில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தேசிய செயலாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளை பரப்பியதாகவும்,மத மற்றும் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க முயற்சித்ததாகவும்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்ததை அடுத்து பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் சிக்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும்,புகார்தாரர்,தேஜிந்தர் பால் மீதான வீடியோ கிளிப் ஆதாரங்களை போலீஸிடம் சமர்ப்பித்துள்ளார்.இதனிடையே,மார்ச் 30 அன்று நடந்த போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேஜிந்தர் பால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து,தேஜிந்தர் பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.அந்த வகையில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காக பஞ்சாபில் தனது கட்சியின் அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளது மிகவும் வெட்கக்கேடானது. இந்த நெருக்கடியான நேரத்தில் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனும் தேஜேந்திர பால் சிங் பக்காவின் குடும்பத்துடன் நிற்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…