ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள வெசுவில் அகமது காண்டே என்பவர் அவரது இல்லத்திற்கு வெளியே சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாஜக பஞ்சாயத்து தலைவர் சஜாத் அஹ்மத் காண்டே என்பவர் குல்கம் மாவட்டத்தில் வெசுவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் துப்பாக்கி காயங்களுடன் அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. காண்டே பாதுகாப்பான புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்தார். நேற்று காலை அவர் வெசுவில் உள்ள தனது வீட்டைப் பார்ப்பதற்காக முகாமிலிருந்து வந்துள்ளார். காண்டே அவரது வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 4 -ம் தேதி மாலை அக்ரான் காசிகுண்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக பஞ்ச் ஆரிஃப் அகமது படுகாயமடைந்தார். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…