முக்கியச் செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாஜக பிரமுகர் கொலை..!

Published by
murugan

சத்தீஸ்கரில் பாஜக தலைவர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். நாராயண்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ரத்தன் துபே நக்சல்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. ரத்தன் துபே இன்று கௌசல்னார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அதிகம் உள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவு டிசம்பர் 3 ஆம் தேதி  அறிவிக்கப்படவுள்ளது. மாவோயிஸ்டுகளால் அதிகம் உள்ள 20 தொகுதிகளில் இன்னும் மூன்று நாள்களில்  முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. நவம்பர் 7-ம் தேதி அதாவது வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிகளின்படி 48 மணி நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கடந்த மாதம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் பாஜக தலைவர் ஒருவரும் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். நவராத்திரி பூஜை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பாஜக தலைவர் இரவு 8:30 மணியளவில்  நக்சலைட்டுகள் வழியில் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

2 minutes ago

டாஸ்மாக் விவகாரம் : அமலாக்கத்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…

21 minutes ago

“கொலை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது தான் காரணம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…

32 minutes ago

‘குட் பேட் அக்லி’ டைட்டில் யார் சொன்னது தெரியுமா.? உண்மையை உடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…

45 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன அரசு திட்டங்கள்? -அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…

2 hours ago

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

3 hours ago