ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பானூ மீதான கொடூர பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைத்தனமான செயல், வன்முறையில் ஈடுபடுபவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்தார்.
குலாம் ரசூல் தார் அனந்த்நாகில் ஒரு வாடகை விடுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…