உத்தரகாண்ட்டில் பா.ஜ.க தலைவர் உயிரிழப்பு.!

Default Image

உத்தரகாண்ட் மாநில அமைச்சர் பதவியில் இருந்த கியான் சிங் நேகி உயிரிழந்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில்,  மாநில அமைச்சர் பதவியில் இருந்த நேகி நேற்று உடல்நிலை குறைவால் ஜாலிகிராண்டில் உள்ள இமயமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உத்தரகண்ட் ஆளுநர் , முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மற்றும் பாஜக தலைவர் பன்சிதர் பகத் ஆகியோர் நேகியின் திடீர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இது மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் கூறினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்