வீட்டு வேலைக்காரியை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் பாஜக தலைவி சீமா பத்ரா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த பழங்குடியின பெண்ணை 6 ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை(ஆகஸ்ட் 29)அன்று அவரை ஜார்க்கண்ட் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பெரும் போராட்டங்களுக்கு பிறகு தனது வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ராஞ்சி காவல்துறையால் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு கிஷோர் கௌஷால் கூறுகையில், “தற்போது பத்ரா போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும்” கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்த பழங்குடியின பெண் பாஜக தலைவி வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் பலவீனமாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜக தலைவி சீமா பத்ரா வீட்டில் மீட்கப்பட்ட பழங்குடியின பணிப்பெண் சுனிதா(29) மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…