மேற்குவங்க பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,பாஜக குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பவானிபூரில், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து,மேற்குவங்க பவானிபூரில் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து,பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்தார்.இதனைத்தொடர்ந்து,தேர்தல் பரப்புரை பணிகளில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா அவர்கள்,”மாநிலத்தில் துர்கா பூஜை, லட்சுமி பூஜையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக பொய் சொல்கிறார்கள்.பாஜக ஒரு ‘ஜும்லா’ கட்சி.
நரேந்திர மோடி ஜி, அமித் ஷா ஜி அவர்களே,தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மாற்றியது போல,இந்தியாவை ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்.இந்தியா ஒற்றுமையாக இருக்கும் … காந்தி ஜி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், குரு நானக் ஜி, கௌதம் புத்தா, ஜெயின்ஸ் பாதையில் அனைவரும் நாட்டில் ஒன்றாக இருப்பார்கள். நாங்கள் இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்”,என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா,மேற்குவங்க முதல்வராக பதவியேற்ற நிலையிலும், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…