டெல்லியில் கொரோணா பரவலுக்கு மத்தியில் கூட துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை பாஜக வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக கட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடிய டெல்லி முனிசிபல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை எனவும், பாஜக துப்புரவு தொழிலாளர்களை அவமதிப்பதாகவும் ஆம் ஆதமி நகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவர்கள் டெல்லியின் சுகாதார அமைப்பு சரியில்லை என்பதை திசைதிருப்பும் தந்திரம் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…