தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என கூறினார்.
மேலும், கூட்டாக இருப்பதும், பலரை ஒன்றிணைப்பதுமே வெற்றியை தரும். பாஜக நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…