மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை என பாஜக அறிவித்துள்ளது.
அக்டோபர் 4 ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.
இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் எம்பி. மானஸ் புனியா ராஜிநாமா செய்தாா். இந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தனது ட்விட்டரில்” மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இந்தத் தோ்தலில் முடிவு தெரிந்ததுதான். முதல்வர் மம்தாவை மீண்டும் வெற்றி பெறவிடாமல் செய்வதுதான் எங்களது தற்போதைய பணி ஜெய் மா காளி என்றார்.
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த முதல்வா் மம்தா பானா்ஜி பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…