மத்தியப்பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை ..!

Published by
murugan

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த  மாநிலத்தில்  உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட 2,533 வேட்பாளர்களாக  உள்ளனர். சிவராஜ் சிங் சவுகான், தனது கட்சி ‘பெரும்பான்மையுடன்’ ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில வாக்காளர்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக 165 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 62 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இந்தப் போக்குகளைப் பார்த்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியிலும், கமல்நாத் சிந்த்வாரா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இருப்பினும், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜோதிராதித்ய சிந்தியா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாக உள்ளது.  இந்த நிலையில் சட்டசபை தேர்தல்  முடிவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

 

Recent Posts

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

15 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

45 mins ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

12 hours ago

சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பாக்க பிளான்?

இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…

13 hours ago

ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…

13 hours ago