உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று பிரதமர் மோடி அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அவர்கள் பாஜகவுக்கு செப்டம்பர் 17 மிக முக்கியமான நாள், இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால் உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாட தான் பாஜக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால், அவருடைய பிறந்தநாள் அடுத்த இருபது நாட்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…