கமாரெட்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்தார்.
கமாரெட்டியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று அதே தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவை விட 6,741 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். கே சந்திரசேகர ராவ் 59911 வாக்குகளும், மற்றும் காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி 54916 வாக்குகளும் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கமாரெட்டி தொகுதி பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டதால் ஆரம்பம் முதலே இந்த தொகுதி மீது அனைவரின் கவனமும் இருந்தது.
இந்த தேர்தலில் சந்திரசேகர ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்தது. ஆனால், பிரசாரத்தின்போது இருவரையும் தோற்கடிப்பேன் என்று வெங்கடரமண ரெட்டி கூறினார். அப்போது அது பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத திருப்பங்களுக்கு இடையே சந்திரசேகர ராவ், ரேவந்த் ரெட்டி இருவரையும் பின்னுக்குத் தள்ளி இறுதியில் வெங்கடரமண ரெட்டி வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்தார். 12-வது சுற்று வரை ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இருந்தார். ரேவந்தின் வெற்றி நிச்சயம் என நினைத்தபோது 13-வது சுற்றில் இருந்து வெங்கடரமண ரெட்டி முன்னிலை பெற்றார். பின்னர் கடைசி சுற்றான 20 சுற்று வரை வெங்கடரமண ரெட்டி முன்னிலையில் இருந்து இறுதியில் வெற்றி பெற்றார்.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…