2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ADR ) ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, சொத்து மதிப்பை வெளியிடும். அந்த வகையில் 2019-2020 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்துக்கள் ரூ.6,988.57 கோடி எனவும் 44 பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடியாக உள்ளது.
இதில், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதிகாரம் மட்டுமின்றி நிதி ரீதியாகவும் வலுவான சக்தியாக வலம் வருகிறது. தேசிய கட்சியான பாஜக-விடம் பெரும் நிதி உள்ளது. அதன் மூலம் நாட்டில் வேறு எந்த கட்சியாலும் முறியடிக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. ரூ. 4,847.78 கோடி சொத்துகளுடன் பாஜக நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) ரூ. 698.33 கோடி (9.99 சதவீதம்) சொத்து இருப்பதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ரூ 588.16 கோடி (8.42 சதவீதம்) சொத்து இருப்பதாகவும் அறிவித்துள்ளன.
மாநில காட்சிகளில் சமாஜ்வாடி கட்சி (SP) அதிகபட்சமாக ரூ.563.47 கோடி (26.46 சதவீதம்) சொத்து இருப்பதாகவும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ. 301.47 கோடி என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ரூ. 267.61 கோடி என்றும், திமுக (ரூ. 162.425 கோடி), சிவசேனா (ரூ. 148.46 கோடி) சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட மொத்த கடன்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 44 மாநிலக் கட்சி மற்றும் ஏழு தேசிய கட்சிகள் சேர்த்து 2019-20 நிதியாண்டில் ரூ.134.93 கோடி நிதிச்சுமை உள்ளதாக தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் அதிகபட்சமாக ரூ.49.55 கோடியும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ரூ.11.32 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) அதிகபட்சமாக ரூ.30.342 கோடி (50.02 சதவீதம்), திமுக ரூ.8.05 கோடி (13.27 சதவீதம்) கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…