Categories: இந்தியா

மேகாலயாவில் புதிய திருப்பமாக தேசிய மக்கள் கட்சி ஆட்சி?

Published by
Venu

பா.ஜ.க. ஆட்சி  மேகாலயாவில் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய திருப்பமாக அக்கட்சியின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறது.

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும், காங்கிரஸ் 21  இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது.

ஒருபுறம் அங்கு ஆட்சியை தக்க வைக்க 21 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் போராடி வந்த நிலையில், மற்றொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. தீவிரம் காட்டியது. பா.ஜ.க. கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய மக்கள் கட்சிக்கே ஆதரவு அளிக்க ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டான்குபர் ராய் முடிவு செய்துள்ளார். ஹெச்எஸ்பிடிபி (HSPDP) கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அக்கட்சியுடன் கைகோர்த்துள்ள 19 இடங்களை வென்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (Conrad sangma) ஆட்சி அமைக்க அழைக்குமாறு மேகாலய ஆளுநர் கங்கா பிரசாத்திடம் கடிதம் அளித்துள்ளார். வரும் 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு கான்ராட் சங்மா முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சிரமம் தான் என்ற போதிலும், தங்களுக்கு ஆதரவளித்துள்ள உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என தாம் நம்புவதாக சங்மா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

30 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago