ஒரே மாதத்தில் இளைஞரை 8 முறை கடித்த ஒரே பாம்பு வினோதமான சம்பவம்.!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தில்  ஒரே பாம்பு ஒரே இளைஞரை 8 முறை கடித்த வினோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் ஒரு இளைஞரை கடந்த ஒரு மாதத்தில் ஒரே பாம்பால் எட்டு முறை கடித்ததாகக்கூறப்படுகிறது. இதில், அதிசயம் என்னெவன்றால் 8 முறையும்  பாம்பு கடித்ததில் அவர் உயிர் தப்பித்துவிட்டார்.

ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்ராஜ் மிஸ்ரா என்ற இளைஞனை ஒவ்வொரு முறை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடைசியாக ஆகஸ்ட்-25 ம் தேதி அந்த பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் கிராம மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து மிஸ்ராவின் தந்தை கூறுகையில், “இந்த பாம்பு ஏன் யஷ்ராஜை குறிவைக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவன் மனநலம் பாதிக்கப்பட்டு, பாம்பின் பயத்தில் இருக்கிறான். இது தொடர்பாக நாங்கள் பல முறை பூஜை  செய்துள்ளோம், பாம்பைப் பிடிக்க பாம்பு மந்திரவாதிகளையும் அழைத்திருக்கிறோம், ஆனால் அனைத்துமே வீண் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்