திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து வெளியிட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்று திருப்பதி, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருப்பதி, திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி, இந்த அப்புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட்டார். அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார்.
அதன்பின் பேசிய அவர், ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்சனாத்ரி என்பதை புராணம், வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, அதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை, ராம நவமி தினத்தில் வெளில்யிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ராமர் பிறப்பிடம் அயோத்தி என்று கூறிய அவர், அவரின் பக்தனான அனுமன் பிறந்தது, திருமலை அஞ்சனாத்ரி ஆகும். அதனை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதாகவும், தாம் அனுமனின் பக்தன் என்றும், அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும், அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…