கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது.
சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை 31-பேருக்கு இது வரை கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரனோ வைரஸ் பீதி ஒரு புறம் இருக்க தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.கோழிக்கோடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் சுமா 200 கோழிகள் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனையில்தான் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதியானது.எனவே பறவைக்காய்ச்சல் தொடர்பாக கேரளாவில் அவரசக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமான வாத்துகள் இறந்தது.இதுமட்டும் அல்லாமல் வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய நிபா வைரஸ் தாக்கத்தாலும் கேரள மாநிலத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…