Bilkis Bano case accused
2002-ல் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் பரவியது. அப்போது பில்கிஸ் பானு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். மேலும், அந்தக் கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் குஜராத்தின் பஞ்சமஹால் சிறையில் அடைக்கப்பட்டனர். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் மாநில அரசு விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் விடுதலை செல்லாது என கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்து அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் 3 பேர் கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர்கள் கூறிய காரணங்கள் விசாரிக்க உகந்தவை அல்ல என நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு ஜனவரி 21-ம் (நாளை மறுநாள்) தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…