பீகாரில் வசிக்கும் பெண் ஒருவர்,பிரசாந்த் சதுர்வேதி என்ற பூசாரி தனது கனவில் வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்,தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,கடந்த ஜனவரியில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதியை அணுகியிருந்தார்.
அப்போது,அந்த சதுர்வேதி அந்த பெண்ணின் மகனுடைய உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திரத்தை கொடுத்து,சில சடங்கு முறையையும் செய்ய சொன்னார்.ஆனால்,அந்த பெண்ணின் மகன் 15 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
இந்நிலையில்,தனது மகன் இறந்த பிறகு,சதுர்வேதி வசிக்கும் காளி கோயிலுக்குச் சென்று,தனது மகன் எப்படி இறந்தார் என்பதை தெளிவுபடுத்தும்படி கேட்டார்.ஆனால்,சதுர்வேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும்,ஆனால்,இறந்த தனது மகன் தன்னை காப்பாற்றியதாகவும் அந்த பெண் உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும்,சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும்,பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் ஒரு அதிர்ச்சியான குற்றச்சாட்டை கூறினார்.
இதுகுறித்து,உள்ளூர் போலீசார் ஒருவர் கூறுகையில்:”சதுர்வேதிக்கு எதிராக எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததால், நாங்கள் அவரிடம் விசாரித்தோம்.
ஆனால்,அந்த பெண் யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சதுர்வேதி மறுத்தார்,மேலும்,அந்த பெண் தன்னை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.எனவே,சதுர்வேதிக்கு எதிராக எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒரு பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர் அவரை விடுவித்தோம்”,என்று கூறினார்.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…