காஷ்மீர் சகோதிரிகளை திருமணம் செய்ததற்காக பீகார் இளைஞர்கள் இருவர் கைது

Default Image

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 35A ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு பீகாரை சேர்ந்த   இரு இளைஞர்கள் காஷ்மீர்  சகோதரிகளை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரை சேர்ந்த பர்வேஸ் மற்றும் வாசிம் என்ற இரு இளைஞர்கள் காஷ்மீரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.அப்பொழுது அவர்கள் காஷ்மீரை சேர்ந்த இரு சகோதிரிகளை காதலித்து வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அவர்கள் அந்த இரு பெண்களை திருமணம் செய்துவிட்டு பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர் .இதனையடுத்து  அந்த பெண்ணின் தந்தை தன்னுடைய மகள்களை காணவில்லை அவர்களை கடத்தி சென்றுள்ளனர் என்றுஅந்த இளைஞர்கள் மீது காஷ்மீர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனிடையே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு காஷ்மீர் போலீசார் பீகாருக்கு சென்று அந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்களோ அந்த பெண்கள் அவர்கள்  விருப்பப்படிதான்  எங்களுடன் வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்