பாகிஸ்தானுடன் தொடர்புடைய 3 பேர் பீகாரிலிருந்து ‘கவுன் பனேகா குரோபதி’ என்ற லாட்டரி மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது பீகாரை சேர்ந்த இம்தியாஸ் அலி, இர்பான் அலி, சந்தோஷ்குமார் ஆகியோர் கவுன் பனேகா குரோபதி என்ற லாட்டரி மூலம் அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் பாகிஸ்தான் எண்ணிலிருந்து தனக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாகவும், கவுன் பனேகா குரோர்பதி லாட்டரியில் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்பட்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் வங்கி கணக்கில் ஜிஎஸ்டி மற்றும் செயலாக்கக் கட்டணங்களுக்கு பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர் லாட்டரி தொகை ரூ.45 லட்சமாகவும் ரூ.75 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாகவும், எனவே அதிக பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 40-45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…