பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000 க்கு குறைவாகவே அமைந்துள்ளது .
பீகாரில் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), ஒரு நெருக்கமான போட்டிக்கு க்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது .ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) -111 தலைமையிலான பெரும் கூட்டணிக்கு எதிராக 124 இடங்களுடன் பெரும்பான்மையை கடந்தது கைப்பற்றியுள்ளது .243 இருக்கைகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை மதிப்பெண் 122 ஆகும்.
ஆனால் சில தொகுதிகளில், வெற்றி அளவு நூலளவில் இருக்கிறது . பார்பிகாவில், ஜனதா தளம் (யுனைடெட்) வேட்பாளர் சுதர்ஷ்குமார் காங்கிரஸின் ’கஜனன் ஷாஹியை வெறும் 113 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். போர் தொகுதியில் , வெற்றி வித்தியாசம் 462 வாக்குகள் மட்டுமே .
ஆர்ஜேடியின் ஃபதேபஹதூர் டெஹ்ரியில் பாஜகவின் சத்ய நாராயணனை வெறும் 464 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் .மேலும்,ஹில்சாவில், ஜே.டி.யூ வேட்பாளர் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக என்று தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையைக் பெற்றுள்ளது . இதில் பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தாலும், 76 இடங்களை வென்று ஒற்றை மிகப்பெரிய கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது . அதன் வாக்கு சதவீதம் 23.03 ஆக உள்ளது.இது பீகார் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.
இதர கட்சிகள்:
காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சிபிஐ (எம்எல்), சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) போட்டியிட்ட 29 இடங்களில் 16 இடங்களை வென்றுள்ளது.
அசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐந்து இடங்களிலும் , பீகாரில் அதன் கூட்டணி பங்காளியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை மட்டும் பிடித்ததுள்ளது .
என்.டி.ஏ-வில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட 150 இடங்களுக்கு போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜான்ஷக்தி கட்சி, ஒரு இடத்தை மட்டுமே வென்றுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…